தமிழக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு – காவல்துறை வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தேவையில்லாமல் வெளியே சுற்றியதாக பறிமுதல் செய்யப்பட்டு உள்ள வாகனங்கள் ஊரடங்கு முடியும் வரை வழங்கப்பட மாட்டாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் பறிமுதல்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மே 24 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 7 வரை நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தேவைக்காக வெளியே செல்வோர் இ-பதிவு செய்து வெளியே செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வீடுகளுக்கே சென்று காய்கறி, பழங்கள், மளிகை பொருள்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியே சுற்றும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜூலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, +2 தேர்வு ரத்து – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் அந்த வாகனங்களை மீண்டும் திருப்பி கொடுத்தால் அவர்கள் மீண்டும் வெளியே சுற்றுவார்கள். அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடியும் வரை அந்த வாகனங்களை வழங்க முடியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் கடந்த 9 நாட்களில் மட்டும் 1.10 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு? அரசின் முடிவு என்ன!
வாகனங்களைப் பொறுத்து ரூ.600 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த அனைத்து வாகனங்களையும் காவல் நிலையத்திலேயே நிறுத்தலாம் எனவும், அங்கு இடவசதி இல்லை என்றால் அருகில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nice use Full new