தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு? அரசின் முடிவு என்ன!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால் ஜூன் 7 ஆம் தேதிக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி கிடைக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.
டாஸ்மாக் திறப்பு
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இந்த பொது முடக்க காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தவிர டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என அரசு உத்தரவிட்டது. இதற்கு முன்னதாக கொரோனா பரவல் துவங்கிய போதே, மதுக்கடைகளில் பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கடைகள் இயங்கும் நேரமும் மாற்றப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், மதுபானம் அருந்துபவர்கள் அதற்கு முன்னதாகவே தேவையான அளவு மது பாட்டில்களை வாங்கி அவற்றை பதுக்கி வைத்திருப்பதாக கண்டறியப்படும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இது தவிர பலர் அண்டை மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வருவதாகவும், அவற்றை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாகவும் புகார்கள் பல எழுந்து உள்ளது. இது தவிர சிலர் கள்ளச்சாராயங்களை காய்ச்சி அவற்றை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் போதைக்காக சானிடைசர் குடிக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் அசிங்கமான மொழி ‘கன்னடம்’ – மன்னிப்பு கோரிய கூகிள் நிறுவனம்!
மேலும் ஊரடங்கு காரணமாக மது விற்பனை தடைபட்டதால் அரசுக்கும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதிக்கு மேல் முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. ஒரு வேளை ஜூன் 7 ஆம் தேதிக்கு மேல் தளர்வுகள் அளிக்கப்பட்டால், மதுக்கடைகளை மீண்டுமாக திறக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் மதுவிற்பனை மூலம் அரசு இழந்த வருவாயை ஈட்டுவதற்கு மதுபாட்டில்களின் விலையில் ஏற்றம் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.