ஜூலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, +2 தேர்வு ரத்து – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஜூலை 3ம் வாரத்தில் நடத்தப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார்.
பொதுத்தேர்வுகள் ரத்து:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ கல்வி வாரியம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக ஜூன் 1ம் தேதி அறிவித்தது. முன்னதாக ஏப்ரல் 14ம் தேதி அன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு பின்னர் பல மாநில அரசுகளும் 10ம் வகுப்பு தேர்வை முன்னதாக ரத்து செய்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வையும் மாநில அரசுகள் ரத்து செய்துள்ளது. மேலும், ஐஎஸ்சி கல்வி வாரியமும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக கூறியுள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநில அரசு பியூசி இரண்டாம் ஆண்டு (12ம் வகுப்பு) தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் ஜூலை 3ம் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது என்று மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு? அரசின் முடிவு என்ன!
மாணவர்களுக்கு அவர்களின் பியூசி முதலாம் ஆண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். மதிப்பீடு முறையில் திருப்தி இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கான தேர்வுகள் மற்றும் ஒரு மொழித்தாள் தேர்வு நடத்தப்படும். 40 மதிப்பெண்களுக்கு பல தேர்வு வினாக்கள் மிகவும் எளிதாக கேட்கப்படும் என்றும் கூறியுள்ளார்.