SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஸ்கீரின் ஷேரிங் மூலம் பணத்தை திருடும் மோசடி!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஸ்கீரின் ஷேரிங் மூலம் பணத்தை திருடும் மோசடி!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஸ்கீரின் ஷேரிங் மூலம் பணத்தை திருடும் மோசடி!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஸ்கீரின் ஷேரிங் மூலம் பணத்தை திருடும் மோசடி!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வங்கி தொடர்பான சேவைகளை செய்து வருகிறது. தற்போது ஸ்கிரீன் ஷேரிங் செயலியின் மூலமாக மோசடி ஏற்படுவதாக தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஸ்கிரீன் ஷேரிங் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்கீரின் ஷேரிங்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனம் 44 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக விளங்குகிறது. தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக நடக்கும் இணைய மோசடிகள் பற்றி அறிவிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் ஃபிஷிங் என்பது போலி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், லிங்க் உள்ளிட்டவை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் இருந்து வருவதை போன்ற போலியான மின்னஞ்சல் முகவரி மூலமாக மோசடிகள் ஏற்படுவதாக அறிவித்திருந்தது.

TNPSC தேர்வுக்கு படிப்பவரா? – உங்களுக்கான முக்கிய வகுப்புகள்..!

இதனை தொடர்ந்து தற்போது அனைத்தும் ஆன்லைன் பணப்பரித்தனைகளில் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் தற்போது ஏராளமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது ஆன்லைன் மோசடிதாரர்கள் ஸ்கீரின் ஷேரிங் வசதியை புதிய மோசடியாக கையாண்டு வருகின்றனர். தற்போது இந்த மோசடியை பற்றி விரிவாக பார்ப்போம். ஒரு வங்கி அதிகாரி போல தங்களை தொடர்பு கொண்டு, தங்களின் பிரச்னைகளை கேட்டறிந்து அதன்பின் ஸ்கீரின் ஷேரிங் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப்போட்டிகள்!

இவ்வாறு பதிவிறக்கம் செய்ததுடன் உங்கள் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களும் திருடப்பட்டு விடும். அத்துடன் தனிப்பட்ட மற்றும் வங்கி கணக்கு தொடர்பான தகவல்களையும் எடுத்து விட முடியும். அதன்பின் தங்களின் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் திருடப்பட்டு விடும். அதனால் வடிக்கயாளர்கள் யாரும் இது போன்று தொலைப்பேசி அழைப்பு, மெசேஜ், மெயில் வழிகளில் தொடர்பு கொண்டால் மூன்றாம் தரப்பு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். மேலும் வங்கி சார்பாக இது போன்ற செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்துவதில்லை. அத்துடன் பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்களின் கிரெடிட் கார்டின் காலாவதி தேதி, சிவிவி, ஓடிபி, பின் நம்பர் உள்ளிட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் SBI எச்சரிக்கை விடுத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!