தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப்போட்டிகள்!

0
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப்போட்டிகள்!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப்போட்டிகள்!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப்போட்டிகள்!

தமிழகத்தில் கொரோனா 3ம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் மாணவர்களும் உற்சாகமாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை தூண்டும் விதமாக தமிழ் வளர்ச்சித் துறையின் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்த உள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாணவர்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

முக்கிய அறிவிப்பு:

தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தமிழ் வளர்ச்சித் துறை எனும் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறைக்கெனத் தனி இணைய தளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. வருடம்தோறும் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே சமூக சிந்தனைகளை வளா்த்தெடுக்கும் வகையிலும், தமிழ் ஆா்வத்தை ஊக்குவிக்கவும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இருப்பினும் கொரோனா காலகட்டத்தில் சரியாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் இந்த போட்டிகள் நடைபெறவில்லை.

இன்ஜினியரிங் படித்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – TCS நிறுவனத்தில் எக்கச்சக்க வேலைவாய்ப்பு!

ஆனால் தற்போது கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்து உள்ளதால் அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் இந்த ஆண்டு போட்டிகள் நடத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் நாட்டுக்காக பாடுபட்ட தலைவா்களான அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும், மேலும் அவா்களின் பிறந்த நாளினை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் தமிழ் வளா்ச்சித் துறையில் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC தேர்வுக்கு படிப்பவரா? – உங்களுக்கான முக்கிய வகுப்புகள்..!

இந்த போட்டிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதன் அடிப்படையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. இது மட்டுமின்றி அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அரசுப் பள்ளி மாணவா்கள் இரண்டு பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது. போட்டி நடைபெறும் இடம், நாள், நேரம், விதிமுறைகள் குறித்து பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர், கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் சுற்றறிக்கை அனுப்பி தெரிவிக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு அறிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!