PM Kisan திட்ட பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூலை 31க்குள் இதை கட்டாயம் செய்யுங்கள்!

0
PM Kisan திட்ட பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு - ஜூலை 31க்குள் இதை கட்டாயம் செய்யுங்கள்!
PM Kisan திட்ட பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு - ஜூலை 31க்குள் இதை கட்டாயம் செய்யுங்கள்!
PM Kisan திட்ட பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூலை 31க்குள் இதை கட்டாயம் செய்யுங்கள்!

இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிஎம் கிசான் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6000 வரை விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இதில் 12வது தவணை பெற e-KYC விவரங்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும். இதனை செய்வதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

பயனாளிகள் கவனத்திற்கு:

இந்திய நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதம மந்திரியின் கிசான் யோஜனா திட்டத்தை மத்திய அரசால் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை என ஒரு வருடத்திற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த உதவித்தொகையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் சார்ந்த பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்.

Exams Daily Mobile App Download

இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 11 தவணை வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே 31ம் தேதி அன்று 11வது தவணை தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சுமார் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்கு ரூ.21,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இத்திட்டத்தில் பயனாளிகள் தங்களின் e-KYC விவரங்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தான் 12வது தவணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜூலை 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 25 வரை அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!

eKYC விவரங்களை சரி பார்ப்பதற்கான வழிமுறைகள்

1. இதற்கு முதலில் pmkisan.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. அதன்பிறகு ‘ஃபார்மர்ஸ் கார்னர்’ பிரிவின் கீழ் ‘eKYC’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

3. இதையடுத்து ‘OTP அடிப்படையிலான eKYC’ என்ற பிரிவின் கீழ் உள்ள ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

4. அடுத்ததாக ‘தேடல்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

5. இப்போது உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு ‘Get OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

6. இறுதியாக OTP-ஐ உள்ளிட வேண்டும். இதையடுத்து உங்களின் விவரங்களை வெற்றிகரமாகச் சரிபார்த்தவுடன் eKYC சரிபார்ப்பு முடிவடைந்துவிடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!