ஜூலை 25 வரை அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
அசாம் மாநிலத்தில் தற்போது நிலவும் மோசமான வானிலைக்கு மத்தியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 25 முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
கோடை விடுமுறை
சமீப காலமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு, புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டுமாக துவங்கி இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அசாம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை தொடரும் என்று கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது, அம்மாநிலத்தில் நிலவும் மோசமான வெள்ள சூழலுக்கு மத்தியில் கோடை விடுமுறையை சில நாட்களுக்கு முன்னரே அறிவிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் வழக்கமான கோடை விடுமுறைகள் ஜூலை 1 வது வாரத்தில் தொடங்கும் என்றும் ஆனால் வெள்ளம் காரணமாக பல மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இந்த முறை முன்கூட்டியே விடுமுறையை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அசாமில் நடைபெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 25 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது.
தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பறந்த முக்கிய உத்தரவு – நாளை முதல் மாஸ்க் கட்டாயம்!
அதன் பிறகு கோடை விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அசாமில் கடந்த 24 மணி நேரமாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) அளித்துள்ள தகவலின்படி, மாநிலத்தின் 32 மாவட்டங்கள் மற்றும் 112 வருவாய் வட்டங்களில் உள்ள 4,941 கிராமங்களில் 54.7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.