தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுவோருக்கு முக்கிய அறிவிப்பு – 60 நாட்களுக்குள் அனுமதி!
தமிழகத்தில் சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தை அணுகும் வீடுகளின் வரைபடத்திற்கு 60 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி உறுதி அளித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் புதிதாக வீடு கட்ட வேண்டும் என்றாலும், ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டில் கூடுதலாகக் கட்டடங்களைக் கட்டுவதாக இருந்தாலும் அதற்குத் திட்ட அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியைச் சென்னை நகர எல்லைக்குள் இருந்தால் பெரு நகர வளர்ச்சிக் குழுமத்திடமும் (சிஎம்டிஎ), சென்னை அல்லாத தமிழகத்தின் பிற பகுதிகள் என்றால் நகரத் திட்ட இயக்ககம் (டிடிசிபி) அமைப்புகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.
தமிழக தனியார் பள்ளிகளில் 100 சதவீத கட்டண வசூல் – புகார் அளிக்க அறிவுறுத்தல்!
இந்நிலையில் சென்னியில் சிஏம்டிஏ அலுவலகத்தில் ஆய்வு செய்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்திற்கு கொரோனா பரவல் காரணமாக பணியாளர்கள் போதுமான அளவில் பணிக்கு வருவதில்லை. இதனால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
மேலும் மக்கள் பிரச்னையை தீர்க்க முதலில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். த்ரோபோது சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தையை புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிஎம்டிஏ வை அணுகும் மக்கள் யாராக இருந்தாலும் கட்டடத்தின் வரைபடம் இருந்தால் சட்டத்திற்கு உட்பட்டு அவர்களுக்கு 60 நாட்களில் அனுமதி வழங்கப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.