தமிழக தனியார் பள்ளிகளில் 100 சதவீத கட்டண வசூல் – புகார் அளிக்க அறிவுறுத்தல்!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 100% கட்டணம் வசூல் செய்வது குறித்து பெற்றோர்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
தனியார் பள்ளிகள்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் காரணத்தால் மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை உயர் நீதிமன்றம் தனியார் பள்ளிகள் அனைத்தும் பெற்றோர்களிடம் 75% கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவல் – பிரதமர் நாளை ஆலோசனை!
ஆனால் தனியார் பள்ளிகள் தொடர்ந்து 100% கட்டணம் வசூல் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு செய்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
TN Job “FB Group” Join Now
தனியார் பள்ளிகளில் இருந்து அதிக அளவிலான மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் 100% கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நேரடியாக யாரும் புகார்கள் தெரிவிப்பதில்லை. பெற்றோர்கள் தைரியமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் அவர்களின் குழு பரிந்துரைக்கு பின், மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.