பேஸ்புக் (Facebook) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
கடந்த சில மாதங்களாகவே பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நாட்டின் தற்போதைய நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. தற்போது இதனை தடுக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
பேஸ்புக்:
நாட்டில் மக்கள் அனைவராலும் பெரிய அளவில் கவரப்பட்டு அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் செயலி தான் பேஸ்புக். இந்த செயலியில் பயனாளர்கள் தங்களது புகைப்படம், வீடியோக்களை பதிவு செய்து வருவர். இந்த செயலி அதற்கு மட்டும் பயன்படாமல் நாட்டில் தற்போதைய நிலை குறித்தும் பல செய்திகளை இதன் மூலம் அறிய முடியும். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த செயலி இந்தியாவில் இயங்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
TN Job “FB Group” Join Now
காரணம் மத்திய அரசு விதித்த புதிய விதிமுறைகள் குறித்து பேஸ்புக் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை இதனால் இந்தியாவில் பேஸ்புக் தொடர்ந்து செயல்படுவது சிரமம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு விதித்த விதிமுறைகளுக்கு பேஸ்புக் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பேஸ்புக்கில் அரசியல், கொரோனா வைரஸ், தடுப்பூசி போன்றவற்றினை பற்றி தொடர்ந்து போலியான தகவல்கள் வெளிவருவதால் இதனை தடுக்க பேஸ்புக் நிறுவனம் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு? இன்று அறிவிப்பு!!
அதன்படி பேஸ்புக் நிறுவனம் தெரிவித்ததாவது, கொரோனா தடுப்பூசி, பாதிப்பு, தேர்தல் போன்ற முக்கியமான தகவல்களை தவறாக பகிரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும் தவறான பதிவுகளை மேற்கொள்ளும் பயனாளரிகளின் தகவல் மக்களை சென்றடைய முடியாத வகையில் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டால் அவர்களின் அனைத்து பதிவுகளும் வராமல் தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – இன்று (மே 28) காலை நடைபெறும்!!
மேலும் எந்த ஒரு பக்கம் தவறான தகவல்களை பகிர்கிறதோ அந்த பக்கத்தின் தவறான தகவல்களின் எண்ணிக்கை அல்லது விவரங்கள் குறித்த முழு தகவல்கள் பயனாளிகளுக்கு வெளிப்படையாக காண்பிக்கப்படும் என்று தெரிவித்தது. அதன் மூலம் அப்பக்கத்தை பற்றிய தெளிவான பார்வை அனைவருக்கும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. போலியான தகவல்கள் தொடர்ந்து பகிர்வதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசு தன் பல தவறுகளை மறைத்து மக்களை கொன்று குவித்து வருகிறது.இதை அனைத்து ஊடகங்களும் தவறான முறையில் அரசுக்கு சாதகமாக திசைதிருப்பும் உத்தியை பேஸ் புக் போன்ற தளங்களில் வெளியிட்டு வருவதை தடுக்கும் வழி.