43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – இன்று (மே 28) காலை நடைபெறும்!!
43-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஏழு மாதங்களுக்கு பின்னர் இன்று புதுடெல்லியில் காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று புதுடெல்லியில் காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்கிறார். பல மாநிலங்கள் அத்தியாவசிய கொரோனா நிவாரண சப்ளைகளில் ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளைக் கோரியுள்ளதால் தற்போது இந்த கூட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!!
இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோலிய பொருட்களை சேர்ப்பது போன்ற சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளுக்கு விதிக்கப்படும் ஐந்து சதவிகித ஜிஎஸ்டியை ரத்து செய்வது, கொரோனா தொடர்பான முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு வரிவிலக்கு அளிப்பது போன்ற கோரிக்கைகளுக்கு இந்த கூட்டத்தில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.