தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு? இன்று அறிவிப்பு!!

0
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு? இன்று அறிவிப்பு!!
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு? இன்று அறிவிப்பு!!
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு? இன்று அறிவிப்பு!!
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் உயர்ந்து வருவதால், தளர்வில்லா முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்புகள் இன்று (மே 28) வெளியிடப்படும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நடைமுறையின் போதும் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். தவிர பலி எண்ணிக்கையானது உயர்ந்து கொண்டே வருகிறது. முன்னதாக தலைநகர் சென்னையில் அதிகளவு பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய பாதிப்பானது வெகுவாக குறைந்து வருகிறது.
அதே நேரத்தில் கோவை, ஈரோடு, விழுப்புரம், மதுரை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினசரி பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை மாநகரில் மட்டும் ஒரு நாளில் 4 ஆயிரம் பேர் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் கொரோனா பேரலை கட்டுக்குள் வரும். இந்த நிலையில் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ள தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறையானது, வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் ஒரு வேளை ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டால், இந்த புதிய பாதிப்புகள் இன்னும் உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதனால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (மே 27) தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஊரடங்கு நீட்டிப்பது  குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது மற்றும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த முடிவுகள் இன்று (மே 28) வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக தேவை ஏற்பட்டால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!