திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விஐபி தரிசனம் ரத்து!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் செப்டம்பர் 27ம் தேதி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேவஸ்தான நிர்வாகம் விழாவிற்கு தேவையான பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் செப்டம்பர் 17ம் தேதி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. இந்த விழாவின் போது அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் தலைமையிலான அரசு பட்டு வஸ்திரங்கள் அளிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த பிரம்மோற்சவ விழா நாட்களில் கோயிலின் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடை பெற உள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
அதனால் மாட வீதிகளில் சாமி உலா நடைபெறவில்லை. இந்த ஆண்டு அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதால் சாமி வீதி உலா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் நடப்பு ஆண்டு 17ம் தேதி நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து செப்டம்பர் 20ம் தேதி அன்று திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க (செப்.15) இன்றே கடைசி நாள் – உடனே விண்ணப்பியுங்கள்!
Exams Daily Mobile App Download
மேலும் திருமலையில் குறைவான தங்கும் அறைகள் உள்ளதால் அவைகளில் 50% ஆன்லைன் மூலமாகவும் மீதி உள்ளவர்கள் நேரடியாக கவுண்டர்கள் மூலமாகவும் பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரம்மோற்சவ விழாவானது செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளதால் பக்தர்கள் சென்று வர ஏதுவாக சுமார் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து திருப்பதி – திருமலை இடையே மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்