நாட்டில் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க (செப்.15) இன்றே கடைசி நாள் – உடனே விண்ணப்பியுங்கள்!
இந்தியாவில் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைகளை மேற்கொள்ள விண்ணப்பங்கள் கடந்த மே 1ம் தேதி முதல் வரவேற்கப்பட்டு வருகிறது. இதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ள விரும்பும் நபர்கள் இன்றே பரிந்துரைக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
பத்ம விருதுகள்
இந்தியாவில் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், தொழில்துறை, பொது விவகாரம், குடிமைப்பணி, வர்த்தகம் ஆகிய துறைகளில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் விதமாக பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கான பரிந்துரைகளை கடந்த மே 1ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக பெறப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தகுதியான நபர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்க வேண்டும் என மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது பத்ம விருதுக்கான நபர்களை பொதுமக்கள் பரிந்துரைக்கலாம் என அறிவித்துள்ளது. மேலும் இதற்கான விதிமுறைகளையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான பரிந்துரைகளை ஆன்லைன் முறையில் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
தமிழக பள்ளிகளில் பொது காலாண்டு தேர்வு ரத்து – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
இதையடுத்து பத்ம விருதுகளுக்கு பரிந்துரைகளை மேற்கொள்ள விரும்பும் நபர்கள் https://awards.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யலாம். மேலும் இந்த விருது குறித்து கூடுதலான தகவல்களை அறிந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் விருதுகள், பதக்கங்கள் உள்ளிட்ட பகுதியிலும் மற்றும் பத்ம விருதுகளுக்கான இணையதளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். மேலும் இவ்விருது குறித்த சட்டங்கள் மற்றும் விதிகள் பற்றி அறிய https://padmaawards.gov.in/
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்