ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தவிர பிரசித்தி பெற்ற கோவில்களில் நடைபெறும் திருவிழா காரணங்களாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு மே 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று அனைத்து மக்களும் பங்கேற்கும் விதமாக மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஜூன் 29ம் தேதி வேலை நாளாக இருக்கும் என திருச்சி மாவட்ட ஆட்சியாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டம் இருப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.