தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – மத்திய அரசு வெளியீடு!
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் மலேரியா, காலரா, டெங்கு முதலிய நோய்கள் பரவ ஆரம்பித்துவிட்டது. இதனால் கிட்டதட்ட 13 மாநிலங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் செய்யப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொசு ஒழிப்பு நடவடிக்கை:
இந்தியாவில் தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் கொசுமூலம் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, யானைக்கால் நோய் போன்ற நோய்கள் பரவ ஆரம்பித்து விடும். இதனால் வீட்டை சுற்றிலும் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ளும்படி மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும், வீட்டில் உள்ள அடிகுழாய்கள், ட்ரம்கள் போன்றவற்றில் கொசு புகாத வண்ணம் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், பல மாநிலங்களில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில், தமிழகம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்களின் உற்பத்தி இல்லை என்பதற்கு மக்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,722 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
குடிநீரில் குளோரின் அளவு குறையும் போது தான் காலரா, மலேரியா போன்ற நோய்கள் பெரும்பாலும் ஏற்படுகின்றன. இதனால், குளோரின் கலந்த நீரை பருகும்படி மக்களை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல், வயிற்றுப்போக்கு என சிறிய அறிகுறிகள் இருந்தாலும் கூட உடனடியாக மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.