தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய தகவல் – அதிர்ச்சியில் பயனாளிகள்!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய தகவல் - அதிர்ச்சியில் பயனாளிகள்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய தகவல் - அதிர்ச்சியில் பயனாளிகள்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய தகவல் – அதிர்ச்சியில் பயனாளிகள்!

தமிழகத்தில் கடந்த ஆண்டு நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டார். அதன்படி தற்போது தகுதியான நபர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழப்பசலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதில் முறைகேடுகள் நடைபெற்று வந்ததால் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி தள்ளுபடிக்கு விண்ணப்பித்திருந்தவர்களின் விவரங்கள் பரிசீலினை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் 48 லட்ச பேர் நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்திருந்தனர்.

Exams Daily Mobile App Download

இதில் ஆய்வு மேற்கொண்டதில் 13 லட்ச பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது மாவட்ட வாரியாக நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தங்களுக்கு தகுதி இருந்தும் இந்த தள்ளுபடி பட்டியலில் இடம் பெறாதவர்கள் மேல்முறையீடு செய்து கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசளை கிராமத்தில் செயல்பட்டு வரும் கீழப்பசலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் வந்தடைந்துள்ளன.

சென்னையில் ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.128 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இங்கு ஆய்வு மேற்கொண்டதில் இங்கு வேலை பார்க்கும் கணினி ஆபரேட்டர் சரண்யா என்பவர் 28 பேர் நகைகளை தனியார் வங்கியில் அதிக தொகைக்கு அடமானம் வைத்து முறைகேடில் ஈடுப்பட்டுள்ளார். இதனை அறிந்த நகைகளின் உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர். அதன்படி சரண்யா மீது குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருந்த செயலாளரும் வங்கி செயலாளர் ராஜேந்திரனை மண்டல இணைப்பதிவாளர் பணி இடைநீக்கம் செய்துள்ளார். இதனை அறிந்த இந்த கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் பெற இருந்த பயனாளிகள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!