சென்னையில் ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.128 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,912க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரே நாளில் ரூ.128 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை:
கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை கூடுவதும் குறைவதுமாய் இருந்து வருகிறது. எப்போதுமே அக்ஷய திருதியையின் போது தான் தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரிக்கும். ஆனால் வழக்கத்திற்கும் மாறாக இந்த ஆண்டு அக்ஷய திருதியையின் போது தங்கத்தின் விலை மிகவும் சரிவடைந்தது. இதனால் மக்கள் பலரும் அக்ஷய திருதியையின் போது நகைகள் வாங்கி மகிழ்ச்சியடைந்தனர். பிறகு மீண்டும் சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தங்கத்தில் முதலீடு செய்வது தான் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான திட்டமாக மக்கள் எண்ணுகின்றனர்.
கனமழையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
ரஷ்யா மற்றும் உக்ரைன் போராலும் பங்குச்சந்தை நிலவரம் சரிவடைந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாய் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.40 ஆயிரம் வரைக்கும் தங்கத்தின் விலை விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,912 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,739 க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.65.40 க்கு விற்பனை செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.16 அதிகரித்து ரூ.4,755 ஆக உள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது மற்றும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 குறைந்து ரூ.65.000 ஆக உள்ளது.