Airtel 5G சேவை குறித்தான முக்கிய தகவல் – CEO அறிக்கை!
இந்தியாவில் ஏர்டெல் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்று மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் உயர் நிர்வாகி அவர்கள் இது குறித்தான முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
Airtel 5G சேவை:
தற்போது நாடெங்கிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிறப்பான வகையில் 4G சேவையை வழங்கி வருகிறது. இதன் வேகம் மக்களை சிறப்பான இணையத்தை அனுபவிக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில், மேலும், சிறப்பான இணைய வேகத்தை அளிக்கும் வகையில் நாட்டில் 5G அலைக்கற்றைக்கான சோதனை முன்னதாக நடத்தப்பட்டது. இதற்கான சோதனைகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு 5G சேவையை வழங்கலாம் என்ற நிலையில், மத்திய அரசு 5G அலைக்கற்றைக்கான ஏலத்தை நடத்தியது.
இந்த போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில், அதிக தொகை செலுத்தி ஜியோ நிறுவனம் அதிக அலைவரிசைகளை பெற்றுள்ளது. 2 வது இடத்தில ஏர்டெல் நிறுவனம் உள்ளது. ஜியோ நிறுவனம் அக்டோபர் மாதம் 5G சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் அறிவிப்பை வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்தியாவில் ஏர்டெல் 5ஜி எப்போது தொடங்கப்படும் என்று ஏர்டெல் சிஇஓ தற்போது அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஏற்பாடு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
Exams Daily Mobile App Download
அதன்படி, இந்தியாவில் ஏர்டெல் 5ஜி அறிமுகம் ஒரு மாதத்தில் நடக்கும் என்று பார்தி ஏர்டெல் தலைமை நிர்வாகி கோபால் விட்டல் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், வாடிக்கையாளர்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் போது 5ஜி சேவையை ஆதாரிக்கும் 5ஜி போனைத் தேடுமாறு உயர் அதிகாரி வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளார். மேலும், டிசம்பர் மாதத்திற்குள், முக்கிய பெருநகரங்களில் கவரேஜ் இருக்கும் என்றும், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நகர்ப்புற இந்தியா முழுவதும் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்