தமிழக பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஏற்பாடு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு என்று பல வித சலுகைகளை தமிழக பள்ளிக்கல்வி துறை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மாணவர்களுக்கு என்று புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தான் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அந்த வகையில் அடுத்த கல்வி ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மாணவர்கள் உயர்கல்வி பயில உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு ஒன்றினை செய்துள்ளது. அதன்படி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உதவும் நோக்கத்தில் அவர்களை நேரடியாக பள்ளிகளுக்கு வரவழைத்து உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
அது மட்டுமின்றி மாணவர்களின் நலன் அறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிற்சி பெற்ற முதன்மை கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த பயம் இருந்தால் அதனை போக்குவதற்கான ஆலோசனைகளை ஆசிரியர்களே வழங்க வேண்டும். மாணவர்களுக்கு உதவும் வகையில் 14417 என்ற உதவி எண்ணிற்கு அழைத்து தங்களது சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் பான் கார்டு பெயர் திருத்தம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
Exams Daily Mobile App Download
இந்த உதவி எண்ணிற்கு மாணவர்கள் அழைத்தால் மாணவர்களை அந்தந்த மாவட்ட முதன்மை பயிற்சியாளர்களுடன் பேச வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது சந்தேகங்கள், உயர்கல்வி குறித்த ஆலோசனைகள், உயர்கல்வி பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் நேரடி உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்ட முதன்மை பயிற்சியாளர்களும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்