முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 10
No Smoking Day 2021!!
- இன்று சர்வதேச புகைபிடித்தல் எதிர்ப்பு தினம் ஆகும். இந்த தினத்தில் மக்கள் புபுகைபிடிப்பதால் ஏற்படும் விளைவுகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
- அதே போல் புகைபிடிப்பவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து எப்படி மீண்டு வரலாம் என்பது குறித்தும் விளக்கப்படுகின்றது.
- மக்களுக்கு இந்த பழக்கம் மூலமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் உணர்த்த இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
- இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரெண்டாம் புதன்கிழமையில் கொண்டாடப்படுகின்றது.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள்
- தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் மார்ச் 10, 1933 அன்று பிறந்தவர்.
- இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர்.
சிறப்புகள்
- தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.
- தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான்.
- தமிழரசன் போன்ற தமிழ்த் தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே.
- 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன.
நூல்கள்
- அறுபருவத் திருக்கூத்து
- எண் சுவை எண்பது
- கனிச்சாறு (எட்டு பாடற்தொகுதிகள்)
- செயலும் செயல்திறனும்
- தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
- திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-1
- திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-2
- திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-3
- திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-4
- பாவேந்தர் பாரதிதாசன்
- பெரியார்
இறப்பு
- சூன் 11, 1995
- இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் “பாவலரேறு தமிழ்க்களம்’ என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்