தமிழகத்தில் 10 மாதங்களில் 1,322 வணிக நிறுவனங்கள் மூடல் – கொரோனா எதிரொலி!!
நாடு முழுவதும் கடந்த 10 மாதங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக நிறுவனங்கள் தங்களின் வணிக தளத்தில் இருந்து வெளியேறியதாக மத்திய வணிக நிறுனவங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாட்டின் வளர்ச்சி:
பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டில் உள்ள தொழித்துறை நிறுவனங்களின் மூலமாகவும், கல்வி வளர்ச்சியின் மூலமாகவும், விண்வெளி ஆராய்ச்சிகளின் மூலமாகவும் நிர்ணயிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்திய நாடு வளரும் நாடுகளின் பட்டியலில் உள்ளது. நமது நாட்டை வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசு மிகவும் கடுமையாக உழைத்து வருகிறது.
1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா பாதிப்பு:
2019 ம் ஆண்டு உலகின் ஒரு மூலையில் தொடங்கிய கொரோனா தொற்று ஒரு சில மாதங்களில் உலகின் அனைத்து பகுதிக்கும் பரவியது. மிகவும் அதிக வேகத்தில் பரவும் தொற்று என்பதால் உலகம் முழுவதும் ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டது. இதனால் நாடு முழுவதும் கடந்த 10 மாதங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிலும், தமிழகத்தில் மட்டும் 1,322 நிறுவனங்கள் வணிகத்தில் இருந்து வெளியேறி உள்ளது.
கொரோனா தொற்றினால் நாட்டின் பொருளாதாரம் பலத்த வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அதிகபட்சமாக டெல்லியில் 2394 நிறுவனங்களும், உத்தரபிரதேசத்தில் 1936 நிறுவனங்களும், தமிழகத்தில் 1,322 நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக தொழித்துறை மீண்டு வளர்ச்சி பாதையை நோக்கி பயணிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்