தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பில் புதிய திருப்பம் – முக்கிய விபரங்கள் சேகரிப்பு!
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்திய விவரங்களை சேகரிக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளிகளை தீர்க்க முடிவு செய்யப்பட்டு முதல்கட்டமாக 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு ரூ.15,000 சம்பள உயர்வு – மகிழ்ச்சியில் பணியாளர்கள்! சூப்பர் அறிவிப்பு!
வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு வருவதால் அவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையில் மனசோர்வை போக்கும் வகையில் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாணவர்களது குடும்பத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டோர் செலுத்தி கொள்ளாதோர், குழந்தைகளை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒப்புதல் தெரிவித்தல் போன்ற விவரங்களை படிவம் மூலமாக சேகரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை – ஆணையர் உத்தரவு!
இந்த படிவத்தில் உள்ளதை பெற்றோர்கள் நன்றாக படித்து பார்க்க சொல்லி அதன் பிறகு கையெழுத்திட வேண்டும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு வாசித்து காட்டி அவர்களது கையொப்பத்தை பெற்று கொள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனால் திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.