தமிழகத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை – ஆணையர் உத்தரவு!
தமிழகத்தில் வருகிற 16 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினரின் கோரிக்கை மனுவை ஏற்று இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை விடுமுறை :
தமிழகத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 1 ம் தேதியில் இருந்து 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கப்பட்டு வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் சுழற்சி முறையில் வகுப்பு வாரியாக மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிகின்றனர். வெகு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
IRCTC மூலம் சேவைக் கட்டணம் இல்லாமல் பஸ் டிக்கெட் புக்கிங் – சூப்பர் அறிவிப்பு!
இந்த நிலையில் வியாழன் (14.10.2021) வெள்ளி (15.10.2021) ஆகிய தினங்கள் தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் வரவுள்ளது. அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் வியாழன், வெள்ளி தொடர் விடுமுறைகளுக்கிடையில் அந்த 16.10.2021 சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாளாக உள்ளது. பண்டிகையை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரேஷன் அரிசி கிடையாது? உணவு பாதுகாப்புத்துறை விளக்கம்!
மேலும் மாணவர்கள் வருகையும் குறைந்து காணப்படும். அதனால் 16.10.2021 சனிக்கிழமைக்கும் சேர்த்து விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி 16.10.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.