விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ நமீதாவிற்கு ரெட் கார்டு வழங்கியது ஏன்? இதுதான் காரணம்!
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து திடீரென நமிதா மாரிமுத்து வெளியேற்றப்பட்டதற்கு, உண்மையான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு பிரபலமடைந்து சினிமாவில் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டது. முதல் நாள் 18 போட்டியாளர்களை நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். இந்த ஆண்டு புது விதமாக வெவ்வேறு துறையை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிக் பாஸ் 5 ப்ரோமோ: தாமரை செல்விக்கு ஆறுதல் கூறும் அபிஷேக் – வியப்பில் ரசிகர்கள்!
அவர்கள் உள்ளே சென்ற நாள் முதல் ஒருவருடன் ஒருவர் நட்பாக பழகி வருகின்றனர். ஆனால் ஒரு சிலருடன் வாக்குவாதங்கள் நடைபெற்றுள்ளது. அதில் முதல் முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நமீதா மாரிமுத்துவிற்கும், தாமரைக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் அதில் தாமரை மீது பெரிய தப்பாக எதுவும் காட்டப்படவில்லை. அதற்காக தாமரை மன்னிப்பும் கேட்டார். ஆனால் நமீதா மன்னிப்பதாக இல்லை. பின் நான் மன்னித்து விட்டேன் என நமீதா சொல்வது போல காட்டப்பட்டது.
இந்நிலையில் திடீரென மறுநாள் எபிசோடில் நமீதா இல்லை, தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேற்றப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்த சரியான காரணம் வெளியாகி உள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் நமீதாவிற்கும் தாமரைக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதனால் எல்லை மீறி நமீதா கிடைத்த பொருளை கொண்டு அடிக்கத் தொடங்கினர். அதனால் அவர் ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “ரோஜா” வரை சீரியல் ப்ரோமோக்கள் – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
ஏற்கனவே அவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடிக்க இருந்த போது படப்பிடிப்புக்கு வராமல் இருந்துள்ளார். இதை கேட்ட புரொடக்ஷன் மேனேஜரை அவர் அடித்துள்ளார். இது தயாரிப்பாளர் சங்கம் வரையில் சென்று அவருக்கு சினிமாவில் நடிக்க தடை விதித்து ரெட் கார்டு கொடுத்துள்ளனர். அவருடைய தாழ்வு மனப்பான்மையின் காரணமாகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.