TNPSC குரூப் 4 & VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவரின் புதிய தகவல்!
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நேற்றுடன் நிறைவுக்கு வந்த நிலையில் இதுவரை பல லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். நேற்று மட்டுமே பல லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக TNPSC தலைவர் அறிவித்துள்ளார்.
குரூப்-4 தேர்வு:
தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை ஒவ்வொரு ஆண்டும் குரூப் -1, குரூப் -2, குரூப் -4 முதலான தகுதி தேர்வுகள் நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலும், குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 29 ஆம் தேதியும் வெளியிடப்பட்டது. மேலும், குரூப் -4 தேர்வின் மூலமாக கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
Exams Daily Mobile App Download
குரூப் -4 தேர்வின் மூலமாக மொத்தமாக 7,382 பணியிடங்களை நிரப்பவுள்ளனர். இதில் 81 பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படவுள்ளன. விஏஓ பணிக்கு 274 காலிப் பணியிடங்களும், ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 3681 காலிப் பணியிடங்களும், தட்டச்சர் பணிக்கு 2108 காலிப் பணியிடங்களும், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு 1024 காலிப் பணியிடங்களும், வீட்டு வசதி வாரியம் நகர்ப்புற வாழ்வில் மேம்பாட்டு வாரியம் ஜூனியர் அசிஸ்டென்ட் பில் கலெக்டர் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு 163 காலிப் பணியிடங்களும் உள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் 30 முதல் ஜூன் 5 வரை கோடை விடுமுறை – பதிவாளர் அறிவிப்பு!
குரூப்-4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குரூப்-4 தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெளியிட்ட நிலையில் பல லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நேற்றுடன் குரூப்-4 தேர்வுக்கான விண்ணப்ப அவகாச முடிவடைந்த நிலையில் இதுவரை இருபத்தி ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 357 பேர் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும் இறுதி நாளான நேற்று மட்டுமே லட்சக்கணக்கான பேர் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்துள்ளதாக TNPSC தலைவர் அறிவித்துள்ளார்.