TN TET தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள ஆசியர்களுக்கான தகுதித் தேர்வு சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறுபான்மை பள்ளிகள்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தகுதி தேர்வினை டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் ஆசிரியர் பயிற்சி பயின்றவர்கள் எழுதலாம். அதன்படி, பூந்தமல்லியில் உள்ள கரையாஞ்சாவடி ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளியில் உதவியாளராக பணிபுரியும் ஆனி என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு TET தேர்வு எழுதி உள்ளார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால், தனது சம்பளம் மற்றும் அனைத்து பணிச் சலுகைகளையும் நிறுத்தி வைக்க திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அதில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் தனக்கு வழங்கப்பட்ட இன்கிரிமெண்ட் களை திரும்பப் பெற வேண்டும் மற்றும் வருடாந்திர இன்கிரிமெண்ட் மற்றும் மகப்பேறு விடுப்பு சலுகைகளை வழங்க கூடாது போன்ற சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதற்கு தனக்கு ரத்து செய்யப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஷாக் நியூஸ் – முதல் நாளில் 32,674 பேர் ஆப்சென்ட்!
மேலும், இந்த வழக்கில் இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009-ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை காலிப் பணியிடத்தில் நிரப்பப்பட வேண்டும் எனவும், சிறுபான்மை பள்ளிகளுக்கு இலவச கட்டாயக் கல்வி சட்டம் பொருந்தாது என கடந்த மே 5ம் தேதி 2014 ஆண்டு அன்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பாணை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் சிறுபான்மை பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை பொருந்தாது” என்று தெரிவித்தது.