சபரிமலை கோவிலில் பிரசாதம் குறித்த முக்கிய அறிவிப்பு – தேவஸ்தானம் வெளியீடு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அரவணை பாயசம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பிரசாதங்கள் தயாரிப்பதற்கான டெண்டரில் இருந்த சாதி நிபந்தனைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வாபஸ் பெற்றுள்ளது.
சபரிமலை அறிவிப்பு
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீக திருத்தலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, அண்டை மாநிலங்கள் முதல் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசித்து செல்வார்கள். அதாவது தமிழ் மாதப்பிறப்பு மற்றும் கார்த்திகை முதல் தை முதல் தேதி வரை நடைபெறும் மண்டல பூஜை, படி பூஜை, மகர விளக்கு, மகர ஜோதி தரிசனம் வரை நாள்தோறும் 10,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசித்துச் செல்வார்கள். மேலும், பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்பிச் செல்லும்போது சபரிமலையில் இருந்து பிரசாதங்களான அரவணை பாயாசம், அப்பம், நெய். விபூதி, குங்குமம் ஆகியவற்றை வாங்கி செல்வது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு நேரடியாக பிரசாதம் வழங்குவது நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக பிரசாதம் வேண்டுவோருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று அபாயம் குறைந்து விட்டதால், வழக்கம் போல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் பிரசாதம் போன்றவற்றை மலையாள பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று தேவசம் போர்டு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
PM Kisan திட்ட விவசாயிகள் கவனத்திற்கு – 12 ஆவது தவணை எப்போது?
Exams Daily Mobile App Download
இந்த விளம்பரத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கேரள அரசுக்கு, மனித உரிமை ஆணையத்திற்கும் புகார்கள் பறந்தது. இதன் எதிரொலியாக ஐயப்பன் கோயில் பிரசாதங்கள் தயாரிக்க விதிக்கப்பட்டிருந்த சாதி நிபந்தனையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் திரும்பப் பெற்றுள்ளது. இனி இந்த நிபந்தனை பின்பற்றப்படாது, சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டிலேயே விளம்பரங்களில் சாதி சார்ந்த பாகுபாடு காட்டக் கூடாது என்று மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பளித்திருந்தாலும், அது பின்பற்றப்படவில்லை. தற்போது, நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்த சாதியவாத நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.