PM Kisan திட்ட விவசாயிகள் கவனத்திற்கு – 12 ஆவது தவணை எப்போது?
PM Kisan திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் 12 ஆவது தவணையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், 12 ஆவது தவணையை பெறுவதற்கு சில வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
PM Kisan திட்டம்
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலமாக இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஒரு ஆண்டிற்கு மட்டும் ரூ.6000 வரைக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது வரைக்கும் 11 தவணைக்கான நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 12 ஆவது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்து கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த நிதியுதவியின் மூலமாக பயனடைந்து வருகின்றனர்.
எப்போதுமே PM கிசான் திட்டத்திற்கான நிதியுதவி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுவிடும். ஆனால், தற்போது 12 வது தவணை செலுத்துவதற்கான முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், எளிமையாக இதுவரைக்கும் PM கிசான் திட்டத்தின் மூலமாக எவ்வளவு பணம் கிடைத்துள்ளது என்கிற அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே சரிபார்த்துக்கொள்ள முடியும். இதற்கு கட்டாயமாக ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றை PM கிசான் போர்ட்டலில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். இதற்கு முன்பு PM கிசான் திட்டத்தின் தவணை தொகையை ஆதார் அல்லது வங்கி கணக்கு மூலமாகவே சரிபார்த்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் கல்குவாரிகளுக்கு முக்கிய எச்சரிக்கை – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
ஆனால், தற்போது PM கிசான் திட்டத்தின் தவணை தொகையை சரிபார்க்க மொபைல் எண் மற்றும் பதிவு எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலில் PM Kisan-ன் அதிகாரபூர்வமான இணையதளமான www.pmkisan.gov.in என்கிற பக்கத்திற்கு சென்று பயனாளியின் நிலை என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு, பதிவு எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்து Enter Image Text க்கு முன்னால் கொடுக்கப்பட்டுள்ள படக் குறியீட்டை பதிவு செய்து Get Data என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பின்னர், PM Kisan கணக்குடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும். இதனையடுத்து, Get Mobile OTP என்பதைக் கிளிக் செய்து OTP எண்ணை பதிவு செய்ய வேண்டும்.