தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட்13) ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெறுவதால் நாளை (சனிக்கிழமை) மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் அதிகமாக மின்தடை ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து பதிலளித்த தமிழக அரசு தமிழகத்தில் மின் உற்பத்தி திறன் குறைவாக உள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் போதுமான மின்சாரம் கையிருப்பு இல்லாத காரணத்தினால் இது போன்ற மின் தடைகள் ஏற்படுகின்றன. மேலும் இது குறித்து மத்திய அரசுடன் கலந்துரையாடி நல்ல தீர்வினை அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கூடிய விரைவில் மின் உற்பத்தியை அதிகரித்து மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
சபரிமலை கோவிலில் பிரசாதம் குறித்த முக்கிய அறிவிப்பு – தேவஸ்தானம் வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்தியா வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் உள்ளது. மேலும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் விரிவாக்கப்பட்ட வருகிறது. இதற்காக குறிப்பிட்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின் மாற்றிகள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாதவாறு மின்வாரியத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை(ஆகஸ்ட் 13)
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர் 10,11,12 வது தெரு, கே.வி.கே.நகர், டூவிபுரம் 5 முதல் 10 வது தெரு வரை உள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற மின்சார செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.