இனி எலக்ட்ரிக் கார்கள் மட்டும் தான் – வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிவிப்பு!
உலக அளவிலான பணவீக்கப் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சந்தை கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு, நாள் உயர்ந்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வின் வலிகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு முதல் எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் திட்டத்தில் வோல்க்ஸ்வாகன் நிறுவனம் மும்முரமாக உள்ளது.
எலக்ட்ரிக் கார்கள்:
உலகளவில் நிலவி வந்த சிப் நெருக்கடி மற்றும் விநியோக சங்கிலி சிக்கல்கள் போன்ற சவால்கள் தற்போது குறைந்துள்ளதும், கொரோனாவால் ஏற்பட்டு வந்த பொருளாதாரத் தடைகள் குறைந்து வருவதும், இந்தியாவில் சொகுசு கார் விற்பனையை முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பானதாக மாற்றப்படும் என கூறப்படுகிறது. தற்போது கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்துள்ளதும், தொழில்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளதும் சொகுசு கார் விற்பனையில் மறுமலர்ச்சியாக அமையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் கொரோனா தாக்கத்திற்குப் பிறகு வாடிக்கையாளர்கள் தேர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் சொகுசு கார்களுக்கான தேவையை அதிகரித்து வருகிறது.
சொகுசு கார் தயாரிப்பாளர்கள் இந்தியாவிலேயே தங்கள் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியதால், செக்மென்ட் மற்றும் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து வருவதால் சொகுசு கார்களுக்கான விற்பனையும் ‘வி’ வடிவ வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வோல்க்ஸ்வாகன் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விர்டஸ் கார் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் ஆகிய இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு செடான் கார் ஆகும். இதில் சிறந்த இடவசதி, டெக்னாலஜி, பாதுகாப்பு வசதிகள் போன்றவை உள்ளன. இந்த காரை தற்போது மாத சந்தா விலை அல்லது ஒப்பந்த அடிப்படையில் நாம் பெற முடியும்.
குழந்தைகளை குறி வைத்து தாக்கும் தக்காளி காய்ச்சல் – உலக சுகாதார மையம் எச்சரிக்கை!
இதனை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே இது போன்ற திட்டங்கள் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன. இதையே இந்தியாவில் ஏற்கனவே மற்ற நிறுவனங்கள் அதன் சில கார்களுக்கு வழங்கி வருகின்றன. இதனை வோல்க்ஸ்வாகன் நிறுவனம் ‘Omni Channel’ சந்தா முறை மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நாம் பெறமுடியும். இந்த புதிய திட்டம் வாடிக்கையாளர்களுக்கு புதிய கார்களை சிறப்பாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கும் என்றும் இதனால் வாடிக்கையாளர்கள் அதிகம் பேர் வோல்க்ஸ்வேகன் கார்களை பயன்படுத்த முடியும் என்று வோல்க்ஸ்வாகன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 க்கும் மேலாக இருந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை ஒப்பிடுகையில் மின்சாரத்தில் விலை குறைவு தான். இதன் அடிப்படையில் தற்போது 2024ம் ஆண்டு முதல் நார்வே நாட்டில் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்ய போவதாக வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்