குழந்தைகளை குறி வைத்து தாக்கும் தக்காளி காய்ச்சல் – உலக சுகாதார மையம் எச்சரிக்கை!

0
குழந்தைகளை குறி வைத்து தாக்கும் தக்காளி காய்ச்சல் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை!
குழந்தைகளை குறி வைத்து தாக்கும் தக்காளி காய்ச்சல் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை!
குழந்தைகளை குறி வைத்து தாக்கும் தக்காளி காய்ச்சல் – உலக சுகாதார மையம் எச்சரிக்கை!

இந்தியாவில் பரவி வரும் குரங்கு அம்மை நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் நாடு முழுவதும் தற்போது தக்காளி காய்ச்சல் எனும் புதிய வகை நோய் பரவி வருகிறது. மேலும் இந்த நோய் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளி காய்ச்சல்:

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பரவி வந்த கொரோனா பரவல் சில மாதங்களாக குறைந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா ஒரு நாள் பரவல் எண்ணிக்கை கூடுவதும், குறைவதுமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து புதிதாக பரவி வரும் குரங்கு அம்மை நோய் மக்களை இன்னும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளது. மேலும் இந்த குரங்கு அம்மை நோய் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உலக சுகாதார நிறுவனம் இந்த நோய் பரவலை உலக அவசர நிலையாக அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இது குறித்து மருத்துவர்கள் இந்த நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் புதிதாக தக்காளி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகளை அதிகமாக இந்த நோய் பாதித்து வருகிறது. இந்த நோயானது கேரளாவில் தான் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே கொரோனாவால் இந்த மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் தக்காளி காய்ச்சல் என்ற புதிய நோய் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. கடந்த மே மாதம் கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் இந்த நோய் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதியம் – தொடரும் பேச்சுவார்த்தை!

Exams Daily Mobile App Download

இதைத் தொடர்ந்து ஒடிசாவிலும், இதர மாநிலங்களிலும் கண்டறியப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 82 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த நோய் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கை, கால் வலி, வாய்ப்புண் போன்றவைகள் இந்த நோயின் அறிகுறிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குழந்தைகளை தொடர்ந்து பெரியவர்களுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், தக்காளி காய்ச்சல் நோய் பரவும் தன்மை கொண்டது என்பதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பால், பழச்சாறு, அடிக்கடி தண்ணீர் போன்ற எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!