தமிழக பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அமைச்சர் பேட்டி!
அரசு பள்ளி மாணவர்களுக்கான விழாவில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உலக செஸ் வீரர்களை வீழ்த்திய இந்திய சிறுவன் பிரக்யானந்தாவை போல அனைத்து மாணவர்களும் தங்களின் திறமை மூலமாக சாதனை படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்:
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் 13 ஆம் தேதியில் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், கடந்த ஆண்டை போல இந்தாண்டில் பாடத்திட்டங்கள் எதுவும் குறைக்கப்படமாட்டாது எனவும், முழு பாடத்திட்டங்களையும் நடத்தும்படி ஆசிரியர்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
ஏற்கனவே, தேனியில் கொரோனாவின் காரணமாக பல மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதே போல வேறு எந்த மாணவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வி சுற்று பயணமாக தென்காசியில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்டுள்ளார். மேலும், அந்த பள்ளியில் நடைபெற்ற சதுரங்க ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.
பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்? பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு!
அப்போது, சதுரங்க விளையாட்டு ஐரோப்பாவில் தோன்றினாலும் கூட எப்போதும் இந்தியர்கள் தான் சதுரங்க போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். மேலும், சதுரங்க போட்டி ஒரு மாணவனின் நியாபக சக்தியை அதிகப்படுத்தும் மற்றும் உடலுக்கு ஊக்கத்தையும் கொடுக்கும். இதனால் ஒவ்வொரு அரசு பள்ளி மாணவனும் சதுரங்க போட்டியில் 16 வீரர்களை வீழ்த்திய பிரக்யானந்தா போன்று தங்களின் திறமைகளை அறிந்துகொண்டு விருப்பப்பட்ட துறையிலேயே சாதனை படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.