பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்? பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு!
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று வீரியம் எடுத்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, மீண்டும் பள்ளிகள் மூட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
பள்ளிகள் மூடல்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படியும், தடுப்பூசி போடாதவர்களை கண்டறிவது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும்படி சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு, மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், மக்கள் அனைவரும் தனி மனித இடைவெளி விட்டு செல்லவும், முக கவசம் கண்டிப்பான முறையில் அணியவும், அப்படி அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ளன.
TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – விரைவில் முடிவுக்கு வரும் WHF முறை? முழு விவரம் இதோ!
கொரோனா தொற்றால் ஒரு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500-ஐ தாண்டி உள்ளதாகவும் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. இதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா என்ற கேள்விகள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிகமான அளவு கொரோனா தொற்று பரவினால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க தனியார் பள்ளிகள் தமிழக அரசிடம் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.