தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் வெளியீடு!
தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சமூக அறிவியல் பாடத்திட்ட ஆசிரியர்களுக்கு கற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேம்பாட்டு பயிற்சி
தமிழகத்தில் தற்போது கொரோனா 2ம் அலை பரவல் குறைந்திருக்க கூடிய சூழலில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 லிருந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 1 லிருந்து 8ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளும் துவங்க இருக்கிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சமூக அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தினசரி 25,000 பக்தர்கள் அனுமதி!
இது தொடர்பாக மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சமூக அறிவியல் பாடத்திட்ட ஆசிரியர்களுக்கு செயல்திட்ட அடிப்படையில் கற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி காணொளி வாயிலாக நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 11.10.2021 முதல் 13.10.2021 வரை 3 நாட்களுக்கு பயிற்சிகள் நடத்தப்படும்.
Bigg Boss Tamil Season 5 Today – Promo 1 | கணவர் இறப்பு குறித்து சொன்ன பாவ்னி ரெட்டி!
அதன் படி தினசரி காலை 9.30 துவங்கும் வகுப்புகள் மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. எனவே இந்த இணைப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது போல அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் வகுப்புகளில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் 5ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் 1,2 மற்றும் 3 பருவ புத்தகங்களை எடுத்து வர வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.