சபரிமலை ஐயப்பன் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தினசரி 25,000 பக்தர்கள் அனுமதி!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் மண்டல மற்றும் மகர விளக்கு விழா தொடங்வுள்ளதால் நாள்தோறும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை:
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவர், கேரளா, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிவர். இந்த நிலையில் கடந்த வருடம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சபரிமலை தேவஸ்தானம் பக்தர்கள் வருகைக்கு தடை விதித்தது. மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளாவில் கட்டுக்கடங்காமல் பரவ தொடங்கிய வைரஸ் பரவலால் கேரளா அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை நீட்டித்தது.
Bigg Boss Tamil Season 5 Today – Promo 1 | கணவர் இறப்பு குறித்து சொன்ன பாவ்னி ரெட்டி!
தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு குறைய தொடங்கியதும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி சபரிமலைக்கு பக்தர்கள் வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். மாதாந்திர பூஜைகளுக்காக குறிப்பிட்ட நாட்களுக்கு கோயில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் மண்டல மற்றும் மகர விளக்கு விழா தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 1 முதல் 8ம் வகுப்புகளுக்காக திறக்கப்பட்ட பள்ளிகள் – எழும் புகார்கள்!
இதனை முன்னிட்டு நாள்தோறும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பம்பை நதியில் குளிப்பதற்கும் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உடன் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்திற்கு பின் பக்தர்கள் கோவிலில் தங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.