தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – காப்பீட்டு திட்டம்!
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக 52 மருத்துவமனைகள் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓய்வூதியதாரர்கள்:
தமிழகத்தில் அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் பயனடையும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி கடந்த 2018 ஆண்டு புதிய காப்பீடு திட்டம் ஒன்றை அறிவித்தது. இத்திட்டம் 01.07.2018 முதல் 30.06.2022 வரை செயல்படும் என்றும் அதன்படி ஓய்வூதியதாரர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியதாரர்களின் அவசர உதவிக்காக மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் காப்பீட்டு திட்டத்தில் அவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை மருத்துவ செலவிற்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மாதம் ரூ.10000 வருமானம் ஈட்ட புதிய முதலீடு திட்டம் – SBI அறிவிப்பு!!
அதுமட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியதாரர்கள் எவருக்கேனும் தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதனால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டால் குறிப்பிட்ட அறுவை சிகிச்சைக்கு காப்பீட்டு திட்டம் மூலம் சுமார் ரூ.7.50 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இது குறித்து புதிய அறிக்கை ஒன்று அறிவித்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற கூடுதலாக 52 மருத்துவமனைகள் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்த இந்த அறிவிப்பு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.