சபரிமலை செல்பவர்களின் கவனத்திற்கு – மண்டல மகர விளக்கு பூஜை தேதி அறிவிப்பு!
கொரோனா தாக்கத்தின் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்கு பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மண்டல-மகரவிளக்கு பூஜை:
நாடு முழுவதும் கொரோனா தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. எனவே ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கேரள மாநிலம் முன்னிலை வகித்து வருகிறது.
அக்.15ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி – அரசு உத்தரவு!
பல்வேறு நிபந்தனையின் பேரில் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சபரிமலையின் பிரசித்தி பெற்ற “மண்டல-மகரவிளக்கு” யாத்திரை நடைபெறவுள்ளது. இதில் ஐயப்பன் கோவிலுக்கு தினமும் 25,000 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரையும், டிசம்பர் 30 முதல் ஜனவரி 18 வரை ஆகிய நாட்களில் கோவில் திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதியில் விட்ட கல்லூரி படிப்பை மீண்டும் தொடர கல்விக்கடன் – குறைந்த வட்டி விகிதம் எங்கே?
இம்முறை 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கோவிலுக்கு வருபவர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தி இருப்பது அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாகும். தரிசனத்திற்கு பிறகு மக்கள் சன்னிதானத்தில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நிலக்கல் பகுதியை தாண்டி KSRTC பஸ்களில் மட்டுமே பம்பை வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள், நிலக்கல் பகுதிக்கு நேரடியாக சென்று பதிவு செய்துகொள்ளலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.