அக்.15ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி – அரசு உத்தரவு!
டெல்லியில் உள்ள அரசு ஊழியர்கள் உட்பட பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தங்களது அலுவலக பணிகளுக்கு திரும்ப கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அந்த வகையில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும், அரசுத்துறை அலுவலக ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லியிலும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் அலுவலகங்களுக்கு திரும்ப வேண்டும் என்றால் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதியில் விட்ட கல்லூரி படிப்பை மீண்டும் தொடர கல்விக்கடன் – குறைந்த வட்டி விகிதம் எங்கே?
அந்த வகையில் அக்டோபர் 15ம் தேதிக்குள் அவர்கள் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் அவர்கள் அலுவலகங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஒரு உத்தரவில், ‘டெல்லி அரசாங்கத்தின் கீழ் உள்ள அரசுத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு ஊழியர்கள், முன்னணி தொழிலாளர்கள்.
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் முழுவதுமாக திறப்பு – தயார் நிலையில் மாணவர்கள்!
சுகாதார பணியாளர்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் உட்பட அனைவரும் வரும் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களின் வருகை தடை செய்யப்பட்டு, அக்டோபர் 16 முதல் விடுப்பில் இருப்பதாக கருதப்படும். மேலும் அரசு ஊழியர்களின் முதல் தடுப்பூசி அல்லது 2ம் டோஸ் தடுப்பூசியின் நிலை குறித்து சான்றிதழ் மூலம் சரிபார்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.