தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செஸ் போட்டி தேதி வெளியீடு!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் மீண்டும் நடைபெற தொடங்கி உள்ளன. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகிவுள்ளது.
செஸ் போட்டிகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற உள்ளது. இதில் இருந்து சீனா விலகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரசு பள்ளிகளை மேம்படுத்த கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் 13000க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அந்தந்த பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு செஸ் போட்டிகள் குறித்த புத்தாக்க பயிற்சிகளை ஜூலை 2ம் தேதிக்குள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்த விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ஜூலி – ப்ரோமோ ரிலீஸ்!
அதுமட்டுமின்றி அனைத்து பள்ளிகளிலும் ஜூலை 2ம் தேதி முதல் செஸ் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளவும் கல்வித்துறை உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.