TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – ஜூலையில் தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்வுகள் முடிவு:
தமிழகத்தில் கடந்த 2020 ஆண்டு முதல் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகளை திறப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வந்தது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்ததால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்தி படிக்க வைக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் பயிலும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டினர்.
Exams Daily Mobile App Download
அதனால் 2021 – 2022ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததால் பற்றாக்குறை நிலவியது. இதனையடுத்து மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி விண்ணப்ப பதிவுகள் நடத்தப்பட்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் உடற்கல்வி இயக்குனர் நிலை — 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை – 1 பதவிகளுக்கு, கணினி வழியில் தேர்வு நடைபெற்றது. சுமார் 190 தேர்வு மையங்களில் 2.30 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். இத்தேர்வின் முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதால் விடைக்குறிப்பை மறு ஆய்வு செய்யும் பணிகளுக்கு இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.