தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!
பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு மின்சார ஓய்வுபெற்ற தொழிலாளர் சங்கத்தின் சார்பாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
கடந்த 2003 ஆம் ஆண்டு வரைக்கும் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன் கிடைத்து வந்தது. இதன் பின்னர் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பல பாதகமான அம்சங்கள் இடம் பெற்ற காரணத்தினால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியர்கள் அவ்வப்போது கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து தற்போதுவரைக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை.
சென்னையில் நாளை (ஜூன் 27) & ஜூன் 28 மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில், தமிழ்நாடு மின்சார ஓய்வுபெற்ற தொழிலாளர் சங்கத்தின் சார்பாக பொள்ளாச்சியில் பொதுக்குழு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் குடும்ப நல நிதியாக ரூபாய் 50,000 வழங்க வேண்டுமெனவும், மத்திய அரசு ஊழியர்களை போல தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனவும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 350 பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும் சில மருத்துவமனைகளில் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கிறார்கள். இதனால் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற ஒரு புதிய திட்டத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. மேலும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில் இந்த போராட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.