IBPS நிறுவனத்தில் ரூ.44,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
பணியாளர் வங்கி தேர்வு அலுவலகம் (IBPS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Officer Scale I, II, III and Office Assistant பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பணியாளர் வங்கி தேர்வு அலுவலகத்தில் (IBPS) காலியாக உள்ள Office Assistant பணிக்கு என 4483 பணியிடங்களும், Office Scale I பணிக்கு என 2676 பணியிடங்களும், Officer Scale II பணிக்கு என 867 பணியிடங்களும். Officer Scale III பணிக்கு என 80 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவு Bachelor’s Degree / MBA / CA / அல்லது Diploma டித்தவராக இருக்க வேண்டும்.
- Officer Scale II, III பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- பணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.44,000/- வரைஓஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Prelims Exam, Main Exam, Personal Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
- Officer (Scale I, II & III) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SC / ST / PWBD பிரிவினராக இருந்தால் ரூ.175/- மற்றும் மற்ற விண்ணப்பதாரர்களிடம் ரூ.850/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
- Office Assistant (Multipurpose) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SC / ST / PWBD / EXSM பிரிவினராக இருந்தால் ரூ.175/- மற்றும் மற்ற விண்ணப்பதாரர்களிடம் ரூ.850/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.