விஷ வாயுவினால் மனிதர்கள் உயிரிழப்பு – இது சட்டப்படி குற்றம்! தமிழக அரசு!
தமிழகத்தில் கழிவுநீர் பாதையை சுத்தம் செய்யும் நபர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சட்டப்படி மனிதர்களை இறக்கி கழிவுநீர் பாதையை சுத்தம் செய்வது குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவு நீர் பாதை:
தமிழகத்தில் வீடுகள், அலுவலங்கள் மற்றும் பிற கட்டிடங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது பணியில் ஈடுபட்டுள்ள நபர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. கழிவுநீர் தொட்டி சரி செய்யும் பணிகளின் போது உரிய சுவாச கருவிகளை பயன்படுத்தாததே இது போன்ற உயிரிழப்பிற்கு காரணம் என்கின்றனர். இந்த நிலையில் கழிவுநீர் பாதையை சுத்தம் செய்ய ஒரு தனி நபரை நியமிப்பது சட்ட விரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றம்.என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இது போன்ற இறப்பினை தடுக்க சென்னை நகராட்சி அதிரடி நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது. அதாவது இனி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய எந்தவொரு தனி நபரையும் பணிக்கு அழைக்க கூடாது. ஒரு வேளை அந்த நபர் பணியின் போது இறந்தால் அதற்கு வீட்டின் உரிமையாளர் பொறுப்பாவார். மேலும் உயிரிழந்த நபருக்கு இழப்பீடுத்தொகை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு விடுதிகள் – முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்!!
Exams Daily Mobile App Download
மனித கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணிக்கு தடை செய்தல் மற்றும் அப்பணி செய்வோரின் மறுவாழ்வு சட்டம் 2013-ன் படி மனிதர்களை இறக்கி கழிவுநீர் பாதையை சுத்தம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதனை மீறி தனி நபரை நியமித்து கழிவு நீர் பாதையை யாரேனும் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டால் 14420 இலவச எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம்.