தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு விடுதிகள் – முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்!!
தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கிடைத்திட வேண்டுமென அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் இன்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கான விடுதிகளை திறந்து வைத்துள்ளார்.
மருத்துவக்கல்லூரி
தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதையடுத்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் நடப்பு ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது மருத்துவ படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக அரசு பல நலத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று மதுரையில் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கான தங்கும் விடுதிகள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்குவதற்கு 144 அறைகளைக் கொண்ட விடுதிக் கட்டிடம் 12.27 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
ஆன்லைன்ல நீங்க பொருள் வாங்குவீங்களா – அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்! உஷார் மக்களே!
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் தங்குவதற்கு தகுந்தவாறு 174 அறைகளைக் கொண்ட விடுதிக் கட்டிடம் ஆனது 8.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் மதுரை அரசு கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஏராளமான நூல்களைப் படிப்பதற்கு 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் நூலக கட்டிடம் ரூ. 8.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மருத்துவக் கல்லூரியில் ரூ.48 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.