கோடை வெயில் கொளுத்த தொடங்கி இருக்கும் நிலையில் பல வீடுகளில் அதிகமாக ஏசி பயன்படுத்துகின்றனர். அவர்களுக்காக அறிவுறுத்தலை மின்வாரிய வெளியிட்டுள்ளது.
மின்வாரியம் அறிவிப்பு
ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து வெயிலில் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. அடுத்த மே மாதம் வந்த பின் அக்னி நட்சத்திரம் வெயில் சொல்லவே வேண்டாம். 100 டிகிரிக்கு குறைவாகவே இருக்காது. இப்போது இருந்தே அதனால் பலர் வீடுகளில் இரவு வேளையில் வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிகமாக ஏசியை பயன்படுத்துகின்றனர்.
TNUSRB காவலர் தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
இதனால் மின் தேவை அதிகமாக ஏற்படுகிறது. எனவே கேரள மாநில மின்வாரிய சார்பில் வேண்டுகோள் ஒன்று மக்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஏசி கருவியை 25 லிருந்து 27 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளத்தில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மோட்டர் பம்ப் ஏசி உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.