மின்சார ரயிலில் போக போறீங்களா? உங்களுக்கு முக்கிய அறிவிப்பு – தெற்கு ரயில்வே வெளியீடு!

0
மின்சார ரயிலில் போக போறீங்களா? உங்களுக்கு முக்கிய அறிவிப்பு - தெற்கு ரயில்வே வெளியீடு!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மின்சார ரயில் சேவை இயங்கும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ரயில் சேவை

சென்னையில் பொதுமக்கள், மாணவர்கள், அலுவகத்திற்கு செல்வோர் என பலர் தினந்தோறும் மின்சார ரயில்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் பலர் விடுமுறை தினத்தை கொண்டாட வெளியே செல்வார்கள் அவர்களின் வசதிக்காக ஞாயிற்று கால அட்டவணையில் மின்சார ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

AC பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மின்வாரியம் கோரிக்கை!

மேலும் சென்னை சென்டிரல் – அரக்கோணம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை (மார்ச் 11) ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!