PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ரூ.2000 வருவதில் சிக்கலா? புகார் தெரிவிப்பது எப்படி?
இந்தியாவில் விவசாயிகளின் நலன் கருதி பிஎம் கிசான் யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இத்திட்டத்தில் உதவித்தொகை கிடைக்க உங்களின் eKYC விவரங்களை சரிபார்ப்பது கட்டாயமாகும். இதையடுத்து தற்போது இத்திட்டத்தில் உதவித்தொகை கிடைக்கவில்லையெனில் புகார் எப்படி தெரிவிக்கலாம் என்று பார்ப்போம்.
பயனாளிகள் கவனத்திற்கு:
இந்தியாவில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பிஎம் கிசான் திட்டம் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த உதவித்தொகையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் தொடர்பான பொருட்களை வாங்கிக் கொள்ள பயன்படுத்துகின்றனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள். அத்துடன் இந்த திட்டத்தில் இணைவதற்கு நில ஆவணங்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வேளாண்மை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் PM Kisan திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்று இந்த ஆவணங்களுடன் இணைத்து சமர்பித்து இணைந்து கொள்ளலாம். இதுவரை இத்திட்டத்தின் கீழ் 10 தவணை வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 11வது தவணை பெற விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விதிமுறைகளில் புதிய மாற்றம்!
மேலும் இந்த திட்டத்தில் www.pmkisan.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற eKYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் பயனாளிகள் தங்களின் eKYC விவரங்களை சரிபார்ப்பது அவசியமானதாகும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற மற்றும் உங்களின் வங்கி கணக்கில் ரூ.2000 உதவித்தொகை கிடைக்கவில்லை எனில் இது தொடர்பாக புகார் தெரிவிக்கவும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இதற்கு 18001155266 என்ற பிரதம மந்திரி கிசான் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.