TNEB டிஜிட்டல் மீட்டரில் வீட்டின் மின் பயன்பாட்டை அறிவது எப்படி? பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகம் முழுவதும் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் பயன்பாட்டை நமது வீட்டில் உள்ள டிஜிட்டல் மீட்டரில் எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்பது குறித்த தகவலை தற்போது மின்வாரிய அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
டிஜிட்டல் மீட்டர்:
தமிழகத்தில் வீடுகள் தோறும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் வீரியம் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் காரணமாக மின்வாரிய அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று மின்பயன்பாடு கணக்கீட்டை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து நுகர்வோர் மின்கட்டணம் செலுத்துவதற்கு மின்வாரியம் புதிய அறிக்கை ஒன்றை அறிவித்தது. அதன்படி கடந்த 2019ம் ஆண்டு மே மாத காலத்தில் செலுத்திய மின்கட்டணத்தை தற்போது செலுத்த வேண்டும் என்றும் புதிய நுகர்வோர் கடந்த மாதம் செலுத்திய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்த அறிவிப்பிற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழும்பியது. காரணம் இந்த வழிமுறையை பின்பற்றினால் அதிக மின்கட்டணம் வருவதாக நுகர்வோர் குற்றம் சாட்டினர்.
TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் அலுவலகம் வர ஏற்பாடு!
தற்போது மாற்று வழியாக நுகர்வோர் தங்களது வீட்டில் உள்ள டிஜிட்டல் மீட்டரில் பதிவாகியுள்ள யூனிட்களை வாட்ஸ் ஆப், மின்னஞ்சல் மூலம் உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அதன்படி கட்டணம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நுகர்வோர் டிஜிட்டல் மீட்டரில் எவ்வாறு கணக்கீடுவது என்பது குறித்து மின்வாரியம் விளக்கமளித்துள்ளது. அதன்படி மின்மீட்டரில் வரிசையாக எண்கள் மாறுபடும் அதில் தேதி, நேரத்திற்கு பின் ஒரு சில எண்களுடன் கே.டபிள்யு.எச் என்ற எண் இடம் பெற்றிருக்கும். அதுவே நுகர்வோர் தாங்கள் பயன்படுத்திய மின் அளவாகும் என்று தெரிவித்துள்ளது.
Which whatsapp number have to send a meter reading?
TNEP whatsapp number send