TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் அலுவலகம் வர ஏற்பாடு!
கொரோனா பரவல் காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பணியாளர்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே வேலை செய்யும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நோய்த்தொற்று குறைந்து வருவதால் அலுவலகங்களை மீண்டுமாக திறக்க TCS ஆலோசனை செய்து வருகிறது.
தனியார் நிறுவனங்கள்:
கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என அறிவித்தது. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி IT நிறுவனமான TCS, தனது பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கொடுத்தது. அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணி புரிந்தாலும், நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு பாதிப்புகள் ஏற்படாத காரணத்தால், WFH முறையை தொடரப்போவதாக சில மாதங்களுக்கு முன்பாக அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் TCS தனது ஊழியர்களை அலுவலகத்துக்கு வர வைக்க தற்போது ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் நிலையில் குறைந்த அளவு ஊழியர்களை மட்டுமே அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தவிர அலுவலகத்தில் பணிபுரிய வரும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியது குறித்த தகவல், தங்கியிருக்கும் இடம், உடல்நலம் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்த பின்னர் அவர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ரூ.4000 & 14 மளிகைப் பொருட்கள் வழங்கல் – முதல்வர் துவக்கி வைப்பு!
மேலும் பொது சேவைகள், வங்கிகள் மற்றும் பங்குச்சந்தைகள், காப்பீடு மற்றும் சுகாதார நிறுவனங்கள், தொலைத் தொடர்பு, ரீடைல், கன்ஸ்யூமர் குட்ஸ், டிராவல் என பல துறைகளுக்கான சேவையை TCS வழங்குகிறது. இதனால் வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக வர்த்தகத்தை செயல்படுத்த முடியாது என்பதால், விஷன் 25/25 திட்டத்தை செயல்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி 25 சதவீத ஊழியர்கள் மட்டும் தான் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும். ஆனால் 488,649 ஊழியர்களை கொண்டு இயங்கி வரும் TCS இதை எப்படி செயல்படுத்தப் போகிறது என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.